Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாமக குளத்தின் சிறப்பு! மாசிமகமின் பிற சிறப்புகள்! மாசிமகமின் பிற சிறப்புகள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகத்தில் நீராட வேண்டிய தலங்கள்!
எழுத்தின் அளவு:
மாசி மகத்தில் நீராட வேண்டிய தலங்கள்!

பதிவு செய்த நாள்

10 மார்
2017
01:03

ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் இங்கு உள்ள இறைவன் சங்கமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காவிரி, பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலம் உள்ளது. யாரொருவர் இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுகிறார்களோ அவரைப் பாவம் தீண்டாது. தேவாரப் பாடல்களில் திருநணா என்றே இத்தலம் குறிப்பிடப்படுகிறது. தீமை நண்ணாத ஊர் என்பதே திருநணா. இங்குள்ள அம்மன் வேதாம்பிகை எனப்படுகிறாள். இவள் மீது பக்தி கொண்ட ஆங்கிலேயர் காணிக்கையாக யானை தந்தக்கட்டில் ஒன்றை அளித்தார். குபேரனும், விஸ்வாமித்திரரும், பராசரரும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். இங்கு முருகப்பெருமான் சோமாஸ்கந்தமூர்த்தி கோலத்தில் வீற்றிருக்கிறார். மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.

தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர் காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

மாசிமகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பவிழா நடுத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்பவிழா நடக்கும். சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார். சென்னையில் மயிலை கபாலீஸ்வரனும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரை சென்று தீர்த்தமாடித் திரும்புவார்கள். இத்தீர்த்தவாரி உருவாகக் காரணமானவர்கள் மகாலட்சுமியும் சமுத்திரராஜனும். பாற்கடல் கடையும் போது பல பொருட்களுடன் மகாலட்சுமியும் வெளிவந்தாள். விஷ்ணு அவளை மணம் புரிந்து கொண்டார். சந்தோஷமடைந்த சமுத்திரராஜன், திருமணம் முடிந்துவிட்டது இப்போது லக்ஷ்மியும் திருமாலும் வைகுண்டம் சென்று விட்டால், திரும்ப நாம் எப்போது இவர்களைக் காண்பது என வருத்தப்பட்டாள். அதை லக்ஷ்மி திருமாலிடம் கூறினாள். அதற்கு திருமால், கவலைப்படாதீர்கள். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று யாம் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காணும் போது உங்களுக்கும் காட்சி தருவோம் எனக் கூறிச் சென்றார்.

ஒரு சமயம் பார்வதி மீனவப் பெண்ணாய் அவதரித்தாள். அவளைத் திருமணம் முடிக்க காலம் கனிந்தபோது ஈசன் கடற்கரைக்குச் சென்று ஒரு பெரிய ராட்சத மீனை உருவாக்கி மீனவர்களுக்குத் துன்பம் தரச் செய்து பின் அவரே மீனவனாக உருமாறி, அம்மீனை அடக்கி நற்பெயர் பெற்று மீனவப் பெண்ணான பார்வதியை மணந்து கொண்டு பின் சிவனாகக் காட்சி தந்தார். மீனவத் தலைவன் உங்களை நாங்கள் எப்போது மீண்டும் காண்பது? எனக் கேட்க, மாசி மகத்தன்று நாங்கள் கடலாடவருவோம் அப்போது காணலாம் எனக் கூறிச் சென்றார். புராணப்படி இது நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி அன்று ஈசனும் ஈஸ்வரியும் கடற்கரைக்கு எழுந்தருள்வார்கள். அப்போது கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனை மாப்ளே, மாப்ளே என மகிழ்வுடன் கூவியழைத்து மகிழ்ந்து தரிசிப்பார்கள்.

வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை ஆண்டபோது தனக்கு புத்திரபாக்யம் வேண்டும் என அண்ணாமலையாரை தினம் வழிபட்டு வந்தார். அவனக்கு உதவ எண்ணம் கொண்ட ஈசன், அம்மன்னனின் அரண்மனைக்கு குழந்தையாக வந்து தவழ்ந்தார். குழந்தையை மன்னன் கையில் எடுத்தவுடன் ஈசன் காட்சியளித்து பக்தனே கவலைப்படாதே நானே உனக்கு மகனாகப் பிறப்பேன். உன் இறுதிக் காலத்திற்குப் பின் மகன் செய்யும் ஈமச் சடங்குகளை உனக்கு நானே செய்வேன் என்றார். அப்படியே மன்னன் சித்தியடைந்த இடமான பள்ளி கொண்டாபட்டில் கவுதமி நதிக்கரைக்கு அண்ணாமலையார் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தவறாமல் நடைபெற்று வருகிறது.

மாசிமகத்தன்று நூற்றுக்கணக்கான ஆலய சுவாமிகள் அலங்காரத்துடன் புதுவையில் வைத்திக் குப்பம் கடற்கரையில் அமைத்த பந்தலில் எழுந்தருளுவர். பின்னர் தீர்த்தவாரி விழா நடைபெறும். பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அனைத்து சுவாமிகளையும் தரிசித்து புண்ணியம் பெறுவார்கள். திருக்காமீஸ்வரம், வரதராஜப் பெருமாளுடன் காரைக்கால் திருப்பட்டணத்தில் மாசிமக தீர்த்தவாரி விழாவில் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள், திருமருகல் வரதராஜப் பெருமாள், கோவில் பத்து கோதண்டபானி, நிரவி காளியம்மன், கரியமாணிக்கப் பெருமாள், காரை நித்யகல்யாணப் பெருமாள், கலந்து கொண்டு தீர்த்தவாரி காண்பது காணக்கிடைக்காத ஒன்று.

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலை பெண்களின் சபரிமலை என்பர். பெண்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இக்கோயிலுக்கு இருமுடிக்கட்டி செல்வார்கள். பொங்கலா என்ற பொங்கல் விழா இங்கு மாசிமாதத்தில் நடைபெறும். விழாவின் 9-ம் நாள் பல லட்சக்கணக்கான பெண்கள் ஒரே சமயத்தில் பொங்கலிடுவார்கள். இதனாலேயே இக்கோயிலுக்கு இரண்டு முறை கின்னஸ் ரிக்கார்டு வழங்கப்பட்டது.  இவ்விழா வடஇந்தியா கும்பமேளா, குடந்தை மகாமகம் போல உலகப் புகழ் பெற்ற விழாவாகும்.  அன்று கோயில் வளாகத்தில் இருந்து சுமார் 5 கி.மீ பரப்பளவிற்கு எங்கு பார்த்தாலும் பொங்கல் அடுப்பு எரியும் அந்த அடுப்புகளின் புகை மூட்டம் திருவனந்தபுர நகரையே மூடி மறைத்து விடும். பொங்கலிட்டு முடித்தபின் ஹெலிகாப்டரிலிருந்து பூசாரி புனித நீரை எல்லா பொங்கல் பானை மீதும் தெளிப்பார். அதற்கு புஷ்பசிருஷ்டி என்று பெயர். அப்போது பெண்கள் தாங்கள் இட்ட பொங்கலை தேவி ஏற்றுக் கொண்டாள் என நம்புவது ஐதிகம்.

திருச்செங்கோடு பஸ்நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு அம்மன் சிறுமி போல் கல்லில் சுயம்பாக தானே தோன்றியவள். ஆலயத்தின் முன் 60 அடி நீளம் பெரிய குண்டம் அமைந்திருக்கும். இதற்கு மாசிக் குண்டம் என்று பெயர். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறும். அருகே பெரிய ஓம்காளி உள்ளாள். இவளுக்கு 40 அடி நீளம் சிறிய குண்டம் அமைந்திருக்கும். இங்கு பங்குனியில் குண்டவிழா நடைபெறும். இதற்கு பங்குனிக் குண்டம் என்று பெயர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar