ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி உற்சவத்தில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 10:03
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி உற்சவத்தில் ரதவீதியில் தேவியருடன் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் மாசி உற்சவத்தை முன்னிட்டு தேவியர்,சுவாமிக்கு பல்வேறு அபிஷேக,தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுடன் ஊர்வலமாக கோயில்வர, ரகுராமபட்டர் வேதம் ஓத தேவியர் சுவாமிக்கு புஷ்பயாக தரிசனம் நடந்தது.முன்னதாக உபயதாரர்கள் செல்லம்உகந்தாச்சி, நாராயணசாமி ஏற்பாட்டில் 2.50 லட்சம் ரூபாய் நிதியில் செம்புகவசத்தில் 32 அடி கொடிகம்பமரம் பிரதிஷ்டை விழா நடந்தது.இரவு ஸ்ரீதேவி ,பூதேவியருடன் ஜெனகநாராயணப்பெருமாள் சுவாமி கனகபுஷ்பசப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர்பூபதி, ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.