பரமக்குடியில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 11:03
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம் துவங்கியது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசிமக விழா மார்ச் 8ல் துவங்கியது. தொடர்ந்து அபிஷேகம், திருவிளக்கு வழிபாடு, பால்குடம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு சக்தி குமரன் கோயிலில் இருந்து, 300 க்கும் மேற்பட்டோர் விரதமிருந்து காவி உடை அணிந்து சைக்கிளில் 41வது ஆண்டாக திருச்செந்துாருக்கு யாத்திரை சென்றனர். சைக்கிள் பயண பக்தர்கள் 5 நாட்களுக்கு பின் திருச்செந்துார் சென்றடைவர். யாத்திரையை குருவடியார் இலக்குமணன் தலைமை வகித்து வழிநடத்தி செல்கிறார். பக்தர்களுக்கு வழிநெடுகிலும் தர்பூசணி பழங்கள், குளுகோஸ், உணவு வழங்கப்பட்டது.