ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் அழகர்கோவிலில் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2017 11:03
அழகர்கோவில், அழகர்கோவில் சுந்தர ராஜ பெருமாள் கோயிலில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர்சேகரிப்பு தொட்டியுடன் கூடிய பேவர்பிளாக்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமியை முதலில் தரிசித்துவிட்டு கோயிலுக்குள் செல்வர். கருப்பண சுவாமி சன்னதி முன் உள்ள காலியிடம் மண் தரையாகவும், குப்பை நிறைந்தும் இருந்தது. இப்போது பக்தர் வசதிக்காக கோயில் முன் உள்ள இடங்களில் உபயதாரர் மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ஆங்காங்கே 5 அடி ஆழத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன. இதனால் மழை நீர் வீணாவது தவிர்க்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் சேமிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.