பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் இன்று பங்குனி உத்திர விழா துவங்குகிறது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், இன்று காலை பங்குனி உத்திர பெரு விழா துவங்குகிறது. இரவு விநாயகர் விழா, சூரிய விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடக்கிறது. ஏப்.1ம் தேதி காலை 11:00 மணிக்கு வெள்ளி விமான உற்சவமும், இரவு 8:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகன உற்சவமும் நடக்கிறது. ஏப்.2ம் தேதி காலை பிரணவ உபதேசம், வெள்ளி விமான உற்சவம், இரவு வெள்ளி பூத வாகன உற்சவமும். 3ம் தேதி காலை விமான உற்சவம், இரவு வெள்ளி நாக வாகன உற்சவமும், 4ம் தேதி காலை வெள்ளி வாகன உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் உற்சவர் கிரிவல காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி காலை வெள்ளி விமான உற்சவம், இரவு வெள்ளி யானை வாகன உற்சமும், 6ம் தேதி காலை ஊடல் உற்சவமும், வெள்ளி விமான உற்சவம், இரவு வெள்ளி மயில் வாகன உற்சவமும், 7 ம் தேதி காலை விமான உற்சவம், இரவு திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது.
ஏப். 8 ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேரில் மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி தேரடி வீதியுலாவும், இரவு 8:00 மணிக்கு முத்து விமான உற்சவமும் நடக்கிறது. மறுநாள் (9ம் தேதி) காலை, தீர்த்தவாரி உற்சவமும், இரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 10ம் தேதி இரவு முத்துபல்லக்கு உற்சவமும், 11ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.