ஹேவிளம்பி புத்தாண்டு ஏப்.13 இரவு 12:43 மணிக்கு பிறக்கிறது. அன்று இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து, பூஜையறையில் வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் இதைப் பார்த்து விட்டு நீராட வேண்டும். பின் மற்றவர்களின் கண்களைப் பொத்தி அழைத்து வந்து இதைப் பார்க்கச் செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்குரிய ராஜா புதன். இவருக்குரிய தெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சொக்கநாதருக்கு பூஜை செய்தால், இனிமையாக அமையும்.