நயினார்கோவில் திரவுபதி அம்மன் பூக்குழி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2017 12:04
ராமநாதபுரம்: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் உப கோயிலான திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏப்., 7 இரவு 9:00 முதல் 10:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 11 இரவு பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதிக்கின்றனர். ஏப்., 12 மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.