Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை திருத்தணி திரவுபதியம்மன் தீமிதி விழா பட்டாபிஷேகத்துடன் நிறைவு திருத்தணி திரவுபதியம்மன் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
06:04

கிருஷ்ணகிரி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி, ஜெகதேவி, பர்கூர், தேவிரஅள்ளி,
சுண்டகாப்பட்டி, பேறுஅள்ளி உட்பட, மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், ஐந்து நாட்களுக்கு முன் கொடியேற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. பங்குனி
உத்திரமான நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை முதல் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும்,
உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக் கொண்டும், மேள தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேவிரஅள்ளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக வந்து, சுவாமி பக்தர்களுக்கு அருள்
பாலித்தார்.

* அரூர் அடுத்த கவுப்பாறையில் உள்ள முருகன் கோவிலுக்கு, ஏராளமானோர் காவடி எடுத்து வந்தனர். 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், டிராக்டர், கார், மினிசரக்கு
வாகனங்களை ஊர்வலமாக இழுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கார்த்திக் என்ற பக்தர், தனது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில், உடல் முழுவதும், 501 எலுமிச்சை பழங்களை குத்தி வந்தார். இதேபோல், தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அரூர் அடுத்த கைலாயபுரம், எல்லப்புடையாம்பட்டி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பூதநத்தம், பொம்மிடி, வெங்கடசமுத்திரம், மோளையானூர் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா வெகு
விமர்சையாக நேற்று நடந்தது.

* வேலூர் அடுத்த வெங்கடாபுரத்தில் உள்ள தீர்த்தனகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில், 308 பால்குடம் ஊர்வலம், அபிஷேகம் நேற்று நடந்தது. கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில், வடிவேல் சுப்பிரமணியருக்கு பால் குடம் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா கணபதி யாகம், திருக்கல்யாணம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar