Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளாகத்தில் வெயில் தெரியாது: ... ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்றாய பெருமாள் கோவிலில் கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சென்றாய பெருமாள் கோவிலில் கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2017
12:04

ராக்கிப்பட்டி: சேலம், ராக்கிப்பட்டி அருகே, செங்கோடம்பாளையம் சென்றாய பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, மலையை சுற்றி இழுத்து வந்தனர்.

செங்கோடம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மலைக்கோவிலில், இந்தாண்டு பங்குனி மாத தேர்த்திருவிழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், இரவு, 9:00 மணிக்கு கருட வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், குதிரை வாகனம் என, சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மலைமேல் உள்ள கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயசுவாமி புறப்பாடாகி தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு முதலில் சிறிய தேரில் இருந்த, ஆஞ்சநேயரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துக்கொண்டு, மலையை சுற்றி வந்து நிலை சேர்த்தனர். அதன் பின், பெரிய தேரை கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து மலையை சுற்றி இழுத்து வந்தனர். தேர் நிலை சேர்ந்ததை, பக்தர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். தேரோட்டத்தை காண ஆட்டையாம்பட்டி, ராக்கிப்பட்டி, புதுப்பாளையம், சீரகாபாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு வாணவேடிக்கையுடன் சத்தாபரண ஊர்வலம், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் தேர்த்திருவிழா முடிகிறது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதி கடற்கரையில் ... மேலும்
 
temple news
கோவை;கோவை சுண்டக்கா முத்தூர் பை பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் முதல் காசி வரை 2500 கி.மீ., தூரம் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar