Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்புக்கு ஏப். 14ல் ... இன்று முதல் குடிக்க மாட்டேன்... : காப்பு கட்டி குடிமகன்கள் சத்தியம் இன்று முதல் குடிக்க மாட்டேன்... : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.27 ஆயிரத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
11:04

உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார் அருகே, கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

Default Image
Next News

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், பழமையான ரத்தின வேல்முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், வேல் மட்டுமே இருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், ஒன்பது நாள் திருவிழா நடத்தி, 10ம் நாள் காவடி பூஜை நடக்கிறது. 11ம் நாள் நள்ளிரவில், இடும்பன் பூஜையின் போது, கருவறை வேலில் தினமும் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள், ஏலம் விடப்படும். மார்ச் 31ல், கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர விழா துவங்கி, தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, கருவறை வேலில் சொருகிய, 9 எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. முதல் நாள் எலுமிச்சை பழம், 27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 2, 3ம் நாள் பழங்கள் தலா, 6,000க்கும்; 4ம் நாள் பழம் 5,800; 5ம் நாள் பழம், 6,300; 6ம் நாள் பழம், 5,000; 7ம் நாள் பழம், 5,600; 8ம் நாள் பழம், 3,700; 9ம் நாள் பழம், 2,700 என, 9 பழங்களும், மொத்தம், 68 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலம் கேட்கும் உரிமை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே உள்ளதால், அவர்களை உடன் வைத்து, வெளியூர்காரர்கள் ஏலம் கேட்டனர். பழத்தை வாங்கியவர்கள், கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஐதீகம் என்ன? : சுவாமிக்கு படையலிட்ட, எலுமிச்சை பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்னை தீரும் என்ற ஐதீகம் உள்ளது. ஏலம் எடுத்த எலுமிச்சை பழத்தை, வீட்டில் படையலிட்டு, விதைகளுடன், மனைவி சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar