Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விட்டிலாபுரம் கோயிலில் சிறப்பு பஜனை! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவிரி புனிதம் காக்கும் யாத்திரை குழுவினர்: கரூருக்கு வருகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2011
11:11

கரூர்: காவிரியின் புனிதம் காக்க மக்களிடம் விழிப்புணர்வு கூட்ட, அகில பாரத துறவியர் குழுவினர் இன்று (5 ம் தேதி) கரூருக்கு வருகின்றனர்.கர்நாடகா மற்றும் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளின் ஜீவநாடியாக உள்ள காவிரியாற்றின் புனிதம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர் வு ஏற்படுத்த அகில பாரத துறவியர் குழுவினர் கடந்த கடந்த 23ம் தேதி கர்நாடகாவில் காவிரியாறு தொடங்கும் இடத்தில் இ ருந்து யாத்திரையை தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் இன்று (5ம்தேதி) கரூர் வருகின்றனர். அவர்களுக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே ஐயப்பா சேவா சங்க மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கரூர் ஆன்மீக, இலக்கிய, தமிழ், பொதுநல அமைப்புகள் சார்பில் யாத்திரை குழுவினருகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கருத்தரங்கம், மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு ஊர்வலம், மாலை 5.30 மணிக்கு நெரூரில் காவிரியாற்றுக்கு ஆரத்தி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் சுவாமி போதானந்தா, ஸ்ரீமத் நித்யசத்வானந்தா, யோகினி ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட துறவியர் கரூரில் காவிரியாற்றின் புனிதம் குறித்து பேசுகின்றனர். நிகழ்ச்சியில் வாசவி மஹிலா மண்டலி, ஐயப்ப சேவா சங்கம், வள்ளலார் அமைப்புகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம், திருக்குறள் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மீனாட்சி கருணாகரன், சக்தி முருகானந்தம், சக்தி ஜெயச்சந்திரன், வள்ளலார் ராமகிருஷ்ணன், புளியம்பட்டி ராமசாமி, வக்கீல் குணசேகரன், சிவசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்."விழிப்புணர்வு யாத்திரையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிகளவில் பங்கேற்கலாம் என விழா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ராமச்சந்திரன், வலம்புரிசோமு, மேலை பழனியப்பன், நாகராசன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar