செஞ்சி : வடபுத்தூர் குருலிங்கேசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, வடபுத்தூரில் உள்ள குருலிங்கேசுவரர் கோவிலில் லட்சார்ச்சனை மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7 மற்றும் 8ம் தேதி காலை இளஞ்செழியன் அடிகள் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 9ம் தேதி காலை குருலிங்கேஸ்வரி சமேதகுருலிங்கேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.