பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
01:04
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில் அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்திசாலை, வெளிபேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக விநாயகர் ஊர்வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், நெசவாளர்காலனி சக்திவிநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.