தருமபுரியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இங்கு விநாயகர், பைரவர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஆகியோர் அற்புதமாகக் காட்சி தருகின்றார். மகாலிங்ககேஸ்வரரையும் மங்காளாம்பிகையையும் தரிசித்து வேண்டினால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதிகம்! ஆனியில் திருமஞ்சனம், ஐப்பசியில் அன்னதானம், மார்கழியில் திருவாதரை ஆகியன சிறப்புற நடைபெறும் இந்தக் கோயிலில், சித்ராபவுர்ணமியில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கு நாளில், இங்கு வந்து நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், விவசாயம், வியாபாரம் ஆகியன சிறக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிகை. இங்குள்ள விநாயகருக்கு வெற்றிலை மாலை, தேங்காய் மாலை, அரளிப் பூமாலை ஆகியவற்றில் ஒன்றை அணிவித்து, மங்களாம்பிகைக்கு நெய் விளக்கேற்றி, மனதாரப் பிரார்த்தித்தால், தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.