மானாமதுரை: கடந்த 3 வருடங்களாக மானாமதுரையில் போதிய மழை பெய்ய தாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கே மக்கள் திண்டாடி வருகின்றனர். மானாமதுரை வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சோனையாசுவாமிக்கு இளைஞர்கள் மழை பெய்ய வேண்டி வைகை ஆற்றில் இருந்து 1008 குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்ததையடுத்து அந்த வருடம் நல்ல மழை பெய்தது.
இதனையடுத்து தற்போது 3 வருடங்களாக மழை இல்லாததால் ஏராளமான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 1008 குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜை,தீபாராதனை நடைபெற்றது.6 வது வார்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.