Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடிக்கிற கை தான் அணைக்கும் ... பதினாறு திருநாமங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீதை கூறும் தவங்கள் மூன்று!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
04:05

பகவான் கிருஷ்ணன் தன்னுடைய கீதையில் மனிதர்களின் குணங்கள், அவர்களின் உணவு போன்ற பல விஷயங்களையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார். அதேபோல் தவத்தையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார். பிறரை அழிக்க வேண்டும் என்பதற்காக, தன்னைத்தானே வருத்திக் கொண்டு செய்யும் தவம், தாமச வகையைச் சேர்ந்தது. தாமச குணம் உள்ளவன், பொறாமையினால் தன்னுடைய தாழ்ந்த சுபாவத்துக்கு இடம்கொடுத்து, பிறரை அழிப்பதற்கான காரியங்களில் ஈடுபடுகிறான். அவன் என்னதான் தவமும் பூஜையும் செய்தாலும், அவனுடைய நோக்கம் பிறருக்குத் தீமையை ஏற்படுத்துவதே என்பதால், அந்தத் தவம், தாமச தவம் ஆகும். அதனால் ஒரு நன்மையும் கிடையாது.

அடுத்ததாக, ராஜஸ குணம் கொண்டவனின் தவம், ராஜஸ குணம் கொண்டவன், தான் செய்யும் தவம், பூஜை அன்னத்தின் பலனையும் தான் ஒருவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவான். அநித்தியமான விஷய போகங்களில் ஈடுபாடு கொண்டு செய்யும் தவம் இது என்பதால், இம்மாதிரியான, தவத்தினை மேற்கொள்பவன் மறுபடியும் மறுபடியும் பிறப்பு - இறப்புச் சூழலில் சிக்கித் தவிக்கிறான். ஆனால், உயர்ந்த நம்பிக்கையுடனும், யோகத்திலே உறுதி பெற்றவனாக, தன்னலம் கருதாமல் செய்யும் தவம், சாத்விக வகையைச் சேர்ந்தது. இதுவே சிறந்த தவம் ஆகும். இதனால் உள்ளத் தூய்மை உண்டாவதுடன், இறைவனின் அன்புக்கும் பாத்திரமாகி, பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைகிறான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar