மகாவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.
மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன் படுக்கச் செல்லும்போது - பத்மாநபன் திருமணத்தின்போது - பிரஜாபதி யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன் நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன் கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன் கஷ்டம் வரும்போது - மதுசூதனன் காடுகளில் செல்லும்போது - நரசிம்மன் நெருப்பால் கஷ்டம் வரும்போது - மஹாவிஷ்ணு தண்ணீரால் கஷ்டம் வந்தால் - வராகன் மலையின் மேல் ஏறும்போது - ராமன் நடக்கும் போது - வாமனன் இறக்கும் நிலையில் - நாராயணன் எல்லா சமயங்களிலும் - மாதவன்