கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2017 11:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வேளாளர் சங்கங்கள் சார்பில் நடந்த மஞ்சள் நீராட்டத்தில்ஏராளமானோர் பங்கேற்றனர். கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 19ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்தவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர்மண்டகப்படி நடத்து வர். அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.நேற்று முன்தினம் விடிய விடிய நடந்த அக்னிசட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தபின், நேற்று அதிகாலையில்பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆயிரம் கண்பானை, அலகு குத்தி வருதல், அங்கப்பிரதட்சணம் போன்றநேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டன. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கப்பிரதட்சணம் அதிகாலை மட்டுமே நடந்தது. தொடர்ந்து நேற்று காலை வேளாளர் சங்கங்களின் சார்பில் மஞ்சள் நீராட்டம் ஊர் முழுவதும் ஊர்வலமாக வந்து நடைபெற்றது. நுாற்றுக்கணக் கான டிராக்டர்களில் மஞ்சள் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு கோயிலிற்கு முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.