பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
திருப்பூர்: சிருங்கேரி சாரதா பீடாதிபதி, ஸ்ரீ ஸ்ரீ பாரதீய தீர்த்த சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ விது சேகர பாரதீ சுவாமிகள், பக்தர்களுக்கு நேற்றும் அருளாசி வழங்கினர்; திருப்பூர் விஜயத்தை நிறைவு செய்து, கரூருக்கு பயணமாகினர். ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் பீடாதிபதிகள், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீய தீர்த்த சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ விது சேகர பாரதீ சுவாமிகள் ஆகியோர், கடந்த, 2ம் தேதி, திருப்பூருக்கு விஜயம் செய்தனர். திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு, பூர்ண கும்ப வரவேற்பு, துõளிபாத பூஜை, ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு அருளுரை ஆகியன நடைபெற்றது. நேற்று முன்தினம், சிருங்கேரி ஸ்ரீ மடத்தை சேர்ந்த அர்ச்சகர்களால், ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு, பொதுமக்களுக்கு தரிசனம் அளித்தனர். நேற்று காலை, 7:00 முதல், 11:00 மணி வரை, ஸ்ரீ மடத்தின் அர்ச்சகர்களால், ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்தது. காலை, 10:00 முதல் 12:00 வரை, ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். குரு பாதுகா பூஜை, ஸ்ரீ சாரதாம்பாள் பாதுகா பூஜை, தீர்த்தப்பிரசாதம், பிஷா வந்தனம், பாத பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்றுடன் திருப்பூர் விஜயத்தை சுவாமிகள் நிறைவு செய்து, கரூருக்கு சென்றனர்.