அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஒன்றியம் தெ. மேட்டுப்பட்டியில் அழகுமுத்தாலம்மன் கோயில் விழா மூன்று நாட்கள் நடந்தது.
முதல் நாள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக வந்து கோயில் சேர்த்தனர். இரவு அம்மன் கரகம் ஜோடித்து முளைப்பாரியுடன் அம்மன் கரகம் தூக்கி நகர்வலம் வந்தனர். தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் முடிந்து சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் அங்கப்பிரதட்சனம், அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.