Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகத்தில் சித்திரை விழா: ... சொக்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் சொக்கநாதர் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 மே
2017
12:05

ஓசூர்: ஓசூர், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில், பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, பக்தர்கள் அலகு குத்தியும், முதுகில் கத்தி அலகு குத்தி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தொங்கிய படியும், நடை பயணமாகவும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சுயம்பு கோட்டை மாரியம்மன், கங்கம்மா, எல்லம்மா, ஏடுகிரம்மா, இசக்கி மாரியம்மன், மணல் மாரியம்மன், துர்க்கையம்மன் ஆகிய, ஏழு கிராம தேவதை கோவில்களில் இருந்து, பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, கரகம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். சில பக்தர்கள் தங்களது முதுகில் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை இழுத்துச் சென்றனர். கோவிலில், ஆடு வெட்டி சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என, மூன்று மாநிலங்களில் இருந்து, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலில் திரண்டதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரகம், பால்குடம், பறவை காவடி மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக வந்த பக்தர்களால், தேன்கனிக்கோட்டை சாலை, ராமநாயக்கன் ஏரிக்கரை, ஏரித்தெரு, எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, பழைய பெங்களூரு சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழிகளில் வாகனங்கள் திரும்பி விடப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar