பதிவு செய்த நாள்
10
மே
2017
12:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 41வது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மே 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்த்தாழி திருப்பல்லக்கு, மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனம் ராஜ அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும்; 12ம் தேதி காலை, 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.