கோவை : லாலி ரோட்டிலுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. கோவை பண்ணாரி மாரியம்மன் கோவிலின், 54ம் ஆண்டு விழா மற்றும், 19வது குண்டம் திருவிழா ஏப்., 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. ஐந்தாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு சக்தி கரகம், பூவோடு அழைப்பும் நடந்தது. இதில், பக்தர்கள் அலகு குத்தியும் காவடி துாக்கியும் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிசேகமும் நடந்தன. பிற்பகல் 12:00 மணிக்கு அலங்கார பூஜையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து, மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடும், இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் விமர்சையாக நடந்தது. சித்ரா பவுர்ணமியான இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், மாலை 6:00 மணிக்கு சித்ரா பவுர்ணமி பூஜையும் நடக்கிறது. மேலும், வரும் 16ம் தேதி காலை 11:00 மணியளவில் மறுபூஜையோடு இவ்வாண்டு திருவிழா நிறைவடைகிறது.