Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்குதிரையில் சோழவந்தான் ஆற்றில் ... செட்டியபட்டியில் குபேரர் திருக்கல்யாணம் செட்டியபட்டியில் குபேரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி இறங்கினார்
எழுத்தின் அளவு:
போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி இறங்கினார்

பதிவு செய்த நாள்

11 மே
2017
12:05

போடி, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6:30 மணிக்கு இறங்கினார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதன் பின் புதுார், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் நகர்வலம் வந்து அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சி நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் நடந்தது.

முன்னாள் தலைவர் குமரன், விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் கட்டாரி பாண்டியன், மத்திய சங்க செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

*உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள் முல்லையாற்றில் பக்தர்கள் கோஷத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். உப்புக்கோட்டை, உப்பார்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சித்திரபுத்திரனார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியகுளம்: பெரியகுளத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து சுவாமி ராஜஅலங்காரத்தில் கள்ளழகராக துாறல் மழையில் வராக நதி கரையோரம் பச்சை பட்டு உடுத்தி, கருப்பு நிற பொட்டுடன் குதிரை வாகனத்தில் காட்சியளித்தார். மழை வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீதி உலா சென்ற கள்ளழகர் வராகநதி படித்துறைகளில் 34 மண்டகபடிதாரர்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபங்கள் மற்றும் கோயில்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அர்ச்சகர்கள் கூறுகையில், விவசாயம் செழிக்கும் என்பதை உணரும் விதமாக கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தியும், கருப்பு பொட்டும் வைத்து காட்சியளித்தார். வரும்காலங்களில் நல்லமழை பெய்து தானிய விருத்தி உட்பட சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும்,என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar