நாகர்கோவிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பறக்கை. மதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் கருடாழ்வார் சிலையை சிற்பிகள் வடிவமைத்த போது ஓர் அற்புதம் நிகழ்ந்ததாம். சிற்பக் கூடத்திலிருந்து கருடாழ்வார் பறந்து வந்து இந்தப் பெருமாள் கோயிலில் அமர்ந்துகொண்டாராம். ஆதலால்தான் இந்த ஊருக்கு பறக்கை என்று பெயர் வந்ததாம். இங்குள்ள கருடனை வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும். ஆண்டுதோறும் இங்கே பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அன்று தெப்பத்தில் பெண்கள் தீபமேற்றி வைத்த மனமுருகி வழிபடுவார்கள். இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடி வரும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.