Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தூர் கெங்கையம்மன் கோவில் ... காசிவிஸ்வநாதர் கோவிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெமிலி அருகே கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை கடத்தி வரப்பட்டதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2017
12:05

வேலூர்: நெமிலி அருகே கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை, கடத்தி வரப்பட்டதா என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே, கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன், 52, விவசாயி. இவரது விவசாய நிலத்திற்கு, நேற்று முன் தினம் காலை, 11:00 மணிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது நிலத்தில் இருந்த சிறு பள்ளத்தில், பித்தளையால் ஆன அம்மன் சிலை கிடந்தது. இந்த சிலை கிடைத்த இடத்திலேயே, சிறிதாக தென்னை ஓலையில் கொட்டாய் போட்டு, அதில் சிலையை வைத்து வழிபட்டார். தகவல் அறிந்த அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கூட்டம், கூட்டமாக வந்து அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அரக்கோணம் தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர்கள் அருள், சாந்தி ஆகியோர், நேற்று மாலை, 4:00 மணிக்கு சென்று, சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர். அவர்களை அங்கிருந்த பெண்கள் தடுத்தனர். அப்போது, பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலை அரசுக்கு சொந்தம். இதை எடுத்துச் செல்வதை தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து, சிலையை எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். பின், சிலையை பறிமுதல் செய்து, நெமிலி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன், இந்த சிலையை நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறுகையில், ”இது மாரியம்மன் சிலை ஆகும். இதன் உயரம், ஒன்றரை அடி, எடை, 30 கிலோ உள்ளது. இந்த சிலையை இப்போது தான் புதியதாக செய்துள்ளனர்,” என்றார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதில், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிலையை எந்த கோவிலில் இருந்தோ கடத்தி வந்து, பரசுராமன் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அமைத்த ஸ்ரீவாரி சம்பத் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar