திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் புறப்பாடு நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இறைவன் கெளரிதாண்டவம் நிகழ்த்திய தலமாகும். ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்ஸவ நடராஜர் -சிவகாமி அம்மன் ஆடல் வல்லான் சன்னதி முன்பாக திருச்சபையில் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சார்யார்களால் பூஜை,அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் மூலவருக்கும், உற்ஸவருக்கும் தீபாராதனை நடந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் சுவாமி- அம்பாள் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.