Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆசி வழங்க மதுரை வந்த அழகருக்கு ரூ. 90 ... உடுமலை கருவண்ணராயர்சாமி கோவில் திருவிழா உடுமலை கருவண்ணராயர்சாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளாத்துாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
எழுத்தின் அளவு:
வெள்ளாத்துாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

பதிவு செய்த நாள்

20 மே
2017
11:05

ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று, வெள்ளாத்துாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர். கே. பேட்டை அடுத்த , வெள்ளாத்துார் கிராமத்தில் அமைந்துள்ளது. வெள்ளாத்துாரம்மன் கோவில், வழக்கமாக ஆடி, தை மாதங்களில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கோடை விடுமுறையில் கூட்டம் அதிகளவில் வர துவங்கியுள்ளது. வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையில், குழந்தைகளுடன் குடும்ப உறுப்பினர்கள், குலதெய்வ கோவிலுக்கு வர விரும்புவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அக்னி நடச்சத்திர காலத்தில்,வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் நந்தவனத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கின்றனர். பின், அங்குள்ள விடுதியில், தங்கி பொழுதை கழிக்கின்றனர். வெயில் குறைந்த பின், மாலையில் புறப்பட்டு செல்கின்றனர். குழந்தைகளுக்கு இந்த கோவிலுக்கு வந்து செல்வது ம னதிற்கு இனிய அனுபவமாக அமைகிறது என்பதால், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவிலும், தினசரி விழாக் கோலம் காண்கிறது. நேற்று, காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் வெள்ளாத்துாரம்மன் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar