Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொண்டல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு புது கொடிமரம் : சன்னிதானத்தில் தேக்குமரம்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு புது கொடிமரம் : சன்னிதானத்தில் தேக்குமரம்

பதிவு செய்த நாள்

23 மே
2017
11:05

சபரிமலை: சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான தேக்கு மரம் சரண கோஷம் முழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுமந்து கொண்டு வந்தனர். சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. கொடி மரத்துக்கு தேவையான தேக்குமரம் வெட்டி கொண்டு வரப்பட்டு, அது பம்பையில் செதுக்கி வடிவமைக்கபட்ட பின்னர் பச்சிலை எண்ணெயில் ஊற வைக்கப்பட்டது. நேற்று காலை இந்த கொடிமரம் பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்களும், பக்தர்களும் பம்பையில் குவிந்தனர்.

திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை துணி கொடிமரத்தில் சுற்றிகட்டிய பின்னர் அதை துாக்குவதற்கான கம்புகள் குறுக்காக கட்டப்பட்டது. காலை 10 மணிக்கு பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி தீபாராதனை நடத்திய பின்னர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் பயணத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் குறுக்கு கம்புகளை தோளில் சுமந்து புறப்பட்டனர். பம்பை முதல் சன்னிதானம் வரை 18 பகுதியாக பக்தர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இவர்கள் நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சுமக்கப்பட்ட கொடிமரம் இரண்டு மணிக்கு சன்னிதானம் கொண்டு வந்தனர். பின்னர் வடக்கு வாசல் வழியாக சோபான திருமுற்றத்தில் கொண்டு வரப்பட்ட கொடிமரம் கோயிலை வலம் வந்த பின்னர் கொடிமரம் அமைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. மே 26-ம் தேதி இது ைஹட்ராலிக் இயந்திரத்தின் உதவியுடன் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் தங்க தகடுகள் பொருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 25-ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar