விக்கிரவாண்டி: பஞ்சமாதேவி கிராம மக்கள், திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றனர். விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்திலுள்ள வரதராஜபெருமாள் கோவிலிருந்து நேற்று காலை, பக்தர்கள் குழுவினர் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
முன்னதாக சுப்பராயலு பாகவதர் தலைமையில் கண்ணன் ராமானுஜதாசர், ஜானகிராம பாகவதர், ராஜா ஆகியோர் தலைமையில் பஜனை பாடல்களை பாடி, யாத்திரையை துவக்கினர் . விக்கிரவாண்டியில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.