பதிவு செய்த நாள்
30
மே
2017
01:05
கரூர்: வைகாசி விழா தேரோட்டம் முன்னிட்டு, கரூர் மாரியம்மன் கோவில் பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு, நாள்தோறும் பக்தர்கள் கோவிலில் நட்டு வைத்த கம்பதிற்கு, தண்ணீர் மற்றும் பால் உள்ளிட்டவை ஊற்றி அபிஷேகம் செய்து வந்தனர். நேற்று முன்தினம், பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை, 7:00 மணிக்கு,
அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் பவனி வந்தார்.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அமராவதி ஆற்றிலிருந்து வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், 10 அடிக்கும் மேலான வேலை, அலகு குத்திக்கொண்டும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். முக்கிய நிகழ்வான, கம்பம் அமராவதி ஆற்றுக்கு, நாளை மாலை விடப்படுகிறது. இரவு ஆற்றில் வாணவேடிக்கை நடக்கும். அசம்பாவிதங்களை
தடுப்பதற்கு, ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்ந்தப்பட்டுள்ளனர்.