மகா பெரியவா என கொண்டாடப்படுபவர் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரைப் போற்றும் விதத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் என்னும் அமைப்பு மதுரையில் செயல்படுகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, தன் கனவில் காஞ்சிப் பெரியவர் வருவது பற்றிக் கூறி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்றார். இதன் பின், ஒரு அடி உயர பெரியவரின் பஞ்சலோக சிலை, வெள்ளி பாதுகை செய்யப்பட்டு பெரியவர் இல்லத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. பெரியவரின் அரிய புகைப்படங்களும் இங்கு உண்டு. இங்கு குரு வந்தனம் என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. விசேஷ நாட்களில், பெரியவர் சிலையை பக்தர்கள் தங்களின் வீட்டுக்கு எழுந்தருளச் செய்து, அபிஷேகம், ஆராதனை செய்யலாம். மதுரை அலங்காநல்லூர் சாலையில் 6 கி.மீ., தூரத்தில் உள்ள அஞ்சல் நகர் 2வது தெருவில் பெரியவர் இல்லம் உள்ளது. நேரம்: காலை 8:00 10:00 மணி, மாலை 5:00 8:00 மணி. தொடர்புக்கு: 94426 30815