திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகம்: இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 02:06
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பத்து நாள் விழாவாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.மே29ல் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் திருத்தளிநாதர்-சிவகாமி அம்பாள் திருவீதிஉலா நடந்தது. நேற்று காலையில் நடராஜர் திருவீதி வலம்வந்தார். தொடர்ந்து, வெள்ளிக்கேடகத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. இரவில் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
இன்று காலை 6:00 மணிக்கு தேரோட்டத்தை முன்னிட்டு ஐம்பெரும் கடவுளர்களும் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்துவர். மாலை 4:00 மணி அளவில் தேரோட்டம் துவங்கும். நாளை காலை 10:20 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதலும்,இரவில் தெப்பக்குள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும்.