திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் 77வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா சுவாமிக்கு காப்புக்கட்டுடன் தொடங்கியது. கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், சக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். கோயில் நிர்வாகிகள் திருவிழா ஏற்பாடுகள் செய்தனர்.