பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
12:06
சென்னிமலை: சென்னிமலை மலை முருகன் கோவில் உண்டியலில், மூன்று மாதங்களுக்கு பின், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஏழு நிரந்தர உண்டியல்களில், 21 லட்சத்து, 95 ஆயிரத்து, 908 ரூபாய் ரொக்கம் செலுத்தப்பட்டிருந்தது. இதில்லாமல், 78.500 கிராம் தங்கம், வெள்ளி, 1,415 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில், 70 ஆயிரத்து, 604 ரொக்கம் இருந்தது. மொத்தமாக நிரந்தர உண்டியல், திருப்பணி உண்டியல்களில், 22 லட்சத்து, 66 ஆயிரத்து, 512 ரூபாய் ரொக்கமாக இருந்தது. உண்டியல் திறப்பில் பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் முருகையா, கோவில் செயல் அலுவலர் அருள்குமார் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் மாணவர்கள், எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.