பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
03:06
முகப்பேர் : முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவதை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
சந்தான சீனிவாசப்பெருமாள் கோவில், முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முகப்பேர், வெள்ளாளர் தெருவில், சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவில், மூன்றாம் நாளான, இன்று காலை கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உதய கருடசேவை, பரமபதநாதன் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழாம் நாள் விழாவான, ஜூன், 25 காலை, 7:00 மணிக்கு, தோளுக்கினியான் புறப்பாடு நடக்கிறது. ஜூன், 27ல், பல்லக்கு ஏகாந்த சேவை, தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கில் பெருமாள் மற்றும் நாச்சியார் புறப்பாடு நடக்கிறது. விழாவின் கடைசி நாளான, ஜூன், 28 காலை, 8:00 மணி முதல் திருமஞ்சனம், கேடயம் பெருமாள், நாச்சியார் புறப்பாடு நிறைவடைந்து, இரவு, 9:30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.