Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... ஐயப்ப பக்தர்கள் வருகையால் களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்த நரிக்குறவர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2011
11:11

திருவள்ளூர் : சபரிமலையில், மாலை விற்று வந்த நரிக்குறவர்கள், முதல் முறையாக விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்க, நேற்று மாலை அணிந்தனர். திருவள்ளூர், பெரியகுப்பம் மேம்பாலம் கீழ், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த, 15 ஆண்டுகளாக இங்கு தங்கி, துளசி, சந்தன மாலை, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து, ரயில்களில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கேரள மாநிலம், சபரிமலைக்குச் சென்று, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் துளசி, சந்தன மாலைகளை விற்பனை செய்வது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அய்யப்பனை தரிசிக்க வருவதை பார்த்து, இவர்களுக்கும் விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்கும் ஆர்வம் வந்து விட்டது. இதையடுத்து, 15 நரிக்குறவர்கள் முதல் முறையாக, அய்யப்பனை விரதமிருந்து தரிசிக்க, நேற்று மாலை அணிந்தனர். கார்த்திகை இன்று பிறக்கும் நிலையில், இவர்கள் நேற்றே மாலை அணிந்து கொண்டனர்.

இது குறித்து, பூபதி என்ற நரிக்குறவர் கூறும்போது, "கடந்த, 15 ஆண்டுகளாக நாங்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று, மாலைகளை விற்பனை செய்து வருகிறோம். இதுவரை, கோவிலுக்கு வெளியில் தான் நாங்கள் சென்றுள்ளோம். ஒருமுறை கூட அய்யப்பனை நேரில் தரிசித்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும், சபரி மலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் கூட்டத்தைப் பார்த்து, எங்களுக்கும் ஆர்வம் வந்து விட்டது. எனவே, இந்தாண்டு நாங்கள், கடும் விரதமிருந்து, அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து கொண்டோம். பொதுவாக, அய்யப்பன் கோவிலுக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்களை, கன்னி சாமி என்று கூறுவர். அதைப் போல், கன்னிசாமியாகி நாங்களும், 48 நாட்கள் கடும் விரதமிருந்து, முறையாக பூஜை நடத்தி, அய்யப்பனை தரிசிக்க செல்வோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar