பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
12:06
இன்றைய சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்திலும் கூட இவ் வழக்கங்களை மேற்கொள்வதைப் பார்த்தால், மனம் படாதபாடு படுகிறது. கெட்ட வழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ் (வசனம்) 2:195ல், “உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,” என்றும், ஹதீஸ் 4:29, “உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,” என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன. கெட்ட வழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன். ஹதீஸ் 6:141, “நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,” என்றும், ஹதீஸ் 17:26, “நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,” என்றும் சொல்கிறது. நோன்பு காலத்தில் கெட்ட வழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். இதற்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.