பழநி உண்டியலில் குவியும் பழைய ரூபாய் நோட்டுகள் : ரிசர்வ் வங்கி அனுமதிக்கு காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2017 12:06
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்கு அடுத்தபடியாக பழநி கோயில் உண்டியல் மூலம் அதிக வருமானம் வருகிறது. சராசரியாக மாதந்தோறும் ரூ.1.5 கோடி வரை வசூலாகிறது. இத்தொகை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், பக்தர்கள் உண்டியலில் அவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில், ஒவ்வொரு உண்டியல் எண்ணிக்கையின்போதும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் உள்ளன. அவற்றை ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, கணக்கில் வரவுவைக்க முடியாது என வங்கிகள் கைவிரித்து விட்டன.இதனால் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளாக ரூ.பல லட்சங்கள் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி மட்டுமின்றி தமிழக கோயில்கள் பலவற்றிலும் உண்டியல் மூலம் பெறும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வங்கிகளில் மாற்ற இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுஉள்ளது என்றார்.