பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
12:06
திருப்பூர் : திருப்பூர், கோவில்வழியில் உள்ள, அழகு நாச்சியம்மன், பொன்னழகி அம்மன் கோவில் கும்பா பிஷேகம், வரும், 5ம்தேதி நடைபெறவுள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழியில், மாடை குலத்தாரின் குலதெய்வமாக, பெரிய அழகு நாச்சியம்மன், பொன்னழகி அம்மன் என் கிற சின்னம்மன் கோவில் உள்ளது. வீரமகளிர் வழிபாடு மரபாக கொண்டு, காட்சி, நீர் படை, நடுகல் என்ற வழிபாட்டு முறையில், கண்ணகிக்கு, அரசன் செங்குட்டுவன் கோவில் அமைத்தார். நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலாக, அழகுநாச்சியம்மன், பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. கோவில் சுவற்றில், பாண்டியர்களின் மீன் சின்னம், அம்மன் கோவில்களுக்கே உரிய சிம்ம வாகனம், ஊஞ்சல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கொங்கு நாட்டுக்கே உரிய விளக்கு தூண் அமைந்துள்ளது. பழமையான இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், விமானங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. வரும் 5ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.