சபரிமலைக்கு சென்றபிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் பம்பை நதிக்கரையில், சிலர் கட்டு கட்டி அப்படியே மலை ஏறுகிறார்கள். இவர்கள் விரதம் எதுவும் இருப்பதில்லை. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. முறையாக விரதமிருந்து மாலை அணிந்து 41நாள் விரதமிருந்து பிறகு தான் கன்னி சுவாமிகள் மலைக்குச் செல்ல வேண்டும். பம்பையில் இருந்து மாலை அணிந்து மலை ஏறுவது பாவம். இவர்கள் ஐயப்பனை அதற்கென உள்ள மாற்றுப்பாதையில் தரிசிக்கலாம். அதற்கு மண்டல, மகர விளக்கு காலத்தில் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. மாதபூஜை மற்றும் பங்குனி பிரம்மோற்ஸவ சமயத்தில் சென்று வரலாம்.