நான் சொல்வது தான் நிஜம். வேண்டுமானால் தலையில் அடித்து சத்தியம் செய்யட்டுமா? என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இயேசு உன் தலை ஒன்றும் சத்தியம் செய்யும் அளவுக்கு அவ்வளவு உயர்ந்ததல்ல என்கிறார். உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம். அதில் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாதே (இயலாதே) என்கிறார். நம்மை உயர்ந்தவர்கள் என தம்பட்டம் அடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார் அவர்.