வசதியான நிலையில் இருப்பவர்களை சகல சவுபாக்கியமும் படைத்தவர்கள் என்பர். ஆனால் எளிமையை கடைபிடிப்பவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்த குணமுள்ளவர்கள், நீதி தவறாதவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதியைக் காக்க துன்பப்படுகிறவர்கள், இறை வழியில் நடப்பதைத் தடுத்து நிறுத்த பல்வேறு துன்பங்களைச் செய்பவர்கள் மீதும் அன்பாய் இருப்பவர்கள், ஏழைகள், தேவனுடைய வார்த்தைகளை கடைபிடிப்பவர்கள், ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும் விருந்து படைப்பவர்கள், எஜமான் வரும் போது விழித்திருப்பவர்கள் ஆகியோரே பாக்கியவான்கள். பணக்காரர்களையும், கவலையற்றவர்கள் போல் திரிபவர்களையும் பாக்கியவான்கள் என இனி சொல்ல வேண்டாம். மேற்கண்ட தன்மைகளை உடையவரே நிஜத்தில் பாக்கியம் செய்தவர்.