உடுமலை கோவில்களில் ஆடிவெள்ளி வழிபாடு: பக்தர்கள் உருக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2017 12:07
உடுமலை: உடுமலை, சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், ஆடி வெ ள்ளி சிறப்பு வழிபாடு துவங்கியது. ஆடி மாதம், அம்மனுக்கு உகந்ததாக, கோவில்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. பக்தர்கள், பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவதும், கோவில்களில் உப்பு கொட்டி வழிபடுவதும் சிறப்பாகும். அம்மனுக்கு கூழ் படை த்து வழிபடுவதும் ஆடி மாத விசேஷமாகும். ஆடி வெள்ளியையொட்டி, உடுமலை, சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.