கீழக்கரை, கீழக்கரை, தட்டார் தெரு உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளியை பாடினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.