Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ரிக் வேதத்தினர் ஆவணி அவிட்டம் ... ராஜராஜேஸ்வரி கோவிலில் நவதானிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓலையக்கா நோன்பு: பெண் குழந்தைகளுக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஓலையக்கா நோன்பு: பெண் குழந்தைகளுக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
01:07

அன்னுார்:உம்மத்துார் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில், பெண்குழந்தைகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கர்நாடக மாநிலத்தில், முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், ஒரு நிர்பந்தத்தால் மைசூர் பகுதியிலிருந்து, ஏராளமான குடும்பங்கள் தமிழகம் நோக்கி வந்தன. அப்போது அதில் எட்டு கன்னிப்பெண்கள்,தங்கள் கற்பை காப்பாற்றிக்கொள்ள ஓலைகளை குவித்து, தீக்குளித்து உயிர் நீத்தனர். அவர்களின் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உருகாதேஸ்வரி அம்மன் சிலை, அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செட்டிபாளையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உம்மத்துார் உருகாதேஸ்வரி அம்மன் கோவில்கட்டப்பட்டது.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் ஓலையக்கா நோன்பு நடக்கிறது. நேற்று முன் தினம் செட்டிபாளையம் கோவிலில், செல்வ விநாயகர், உருகாதேஸ்வரி அம்மன், மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பெண் குழந்தைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கோவிலில், பனை ஓலையால், செய்யப்பட்ட அம்மன் உருவத்துடன், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பல பொருட்கள், கன்னிப்பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. குழந்தைகளை அம்மனாக நினைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஊட்டி, பஜனை குழுவின் பஜனை நடந்தது. பெண்கள் நடனமாடினர். மதியம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar