பதிவு செய்த நாள்
29
ஜூலை
2017
01:07
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு சிநேகவல்லிதாயார் தபசு கோலத்தில் காட்சியளித்தார்.
பின்பு அம்பாள் கதிர் குளித்தலும், உல்லாச சயன அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கமுதி: கமுதி அருகே கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் விழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
கமுதி கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 16 ஆம் ஆண்டு ஆடிப்பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது, ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆக, 3 ல், திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், 4 ல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்தல், நேர்த்தி கடன் செலுத்துதல், அம்மனுக்கு பாலாபிேஷகம் நடக்கிறது.