Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவேரியார் ஆலய விழா கொடியேற்றம்! கோபி ஐயப்பன் கோவில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ரூ.3 கோடியில் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2011
11:11

திசையன்விளை:உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ரூ.3 கோடி செலவில் ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று திசையன்விளை அருகேயுள்ள உவரியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இங்கு நடைபெறும் வைகாசி விசாகம் மற்றும் விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கொடிமரம் நிறுவப்பட்டது. தற்போது முதன்முறையாக தேர் திருவிழா நடைபெறவுள்ளது.இதற்காக ரூ.1.50 கோடி செலவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. முதலாவது தேர் திருவிழா வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு ஸ்ரீபலிநாதர் உற்சவம், விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதி உலா, இரவு 7 மணிக்கு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி காலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்த பிறகு தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுதருளி வீதியுலா வருகின்றனர். விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடக்கின்றன. இந்த கோயில் முன்பு ரூ.3 கோடி செலவில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் 90 அடி உயரத்தில், 41 அடி அகலத்தில், 29 அடி நீளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்படவுள்ளது. இதில் முதல் 30 அடி உயரம் கருங்கற்களால் கட்டப்படவுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் மாதிரி வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிவிரைவில் திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளன. இத்தகவலை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar