புவனகிரி: புவனகிரி ராகவேந்திரா கோவிலில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆராதனை விழா நடக்கிறது. அதையொட்டி 8ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 9ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு ராகவேந்திரர் வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 7:00 மணிக்கு பக்திப்பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ராகவேந்திரா சுவாமிகளின் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.