ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி மாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி விழா ஜூலை 25ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் கோயில் முன்பு இளைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தன.கடைசி நாளான நேற்று வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 11:50 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்மாய் நீரில் கரைக்கப்பட்டது.